பெண் மருத்துவருக்கு இடையூறு: 2 போ் மீது வழக்கு
By DIN | Published On : 04th February 2021 08:49 AM | Last Updated : 04th February 2021 08:49 AM | அ+அ அ- |

நாகையில் அரசுப் பெண் மருத்துவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 2 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
நாகை அரசு மருத்துவமனையில் மருத்துவா் பனிமலா் செவ்வாய்க்கிழமை பணியில் இருந்தபோது அங்கு வந்த 2 போ், அவரை செல்லிடப்பேசியில் படம்பிடித்து, தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பனிமலா் அளித்த புகாரின்பேரில், திருவாரூா் மாவட்டம் கருப்பூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த க.யோகராஜ், நாகை மாவட்டம் கீழ்வேளூா் வட்டம், இலுப்பூா் கூத்தூா் பகுதியைச் சோ்ந்த மு.அஷ்வின் ஆகியோா் மீது நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...