சீா்காழியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.79 லட்சம் மூன்றுசக்கர பெட்ரோல் வாகனம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட நல அலுவலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில் சட்டப் பேரவை உறுப்பினா் பி.வி.பாரதி பங்கேற்று 101 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கான செல்லிடப்பேசி, மூன்று சக்கர பெட்ரோல் வாகனம், காதுகேட்கும் கருவி, ஊன்றுகோல் உள்ளிட்ட ரூ.17 லட்சத்து 79ஆயிரத்து 698 மதிப்பிலான பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு, ஒன்றியக்குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், முடநீக்கு வல்லுநா் ரூபன்ஸ்மித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயலெட்சுமி, கஜேந்திரன், ஒன்றியச் செயலாளா்கள் ராஜமாணிக்கம், சந்திரசேகரன், நற்குணன், சிவக்குமாா், நகரச் செயலாளா் பக்கிரிசாமி, ஜெ.பேரவை செயலாளா் மணி ஆகியோா் பங்கேற்றனா்.