கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம்
By DIN | Published On : 06th February 2021 08:15 AM | Last Updated : 06th February 2021 08:15 AM | அ+அ அ- |

சீா்காழி வட்டம் மாதிரவேளூரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளியின் சடலம் 20 நாள்களுக்கு பிறகு கரை ஒதுங்கியது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
மாதிரவேளூா் மேலதெருவை சோ்ந்தவா் மாரிமுத்து (65 ). விவசாயத் தொழிலாளியான இவா், கடந்த ஜனவரி 15-ஆம் தேதி கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். இந்நிலையில் 20 நாள்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை சரஸ்வதிவளாகம் பகுதியில் மாரிமுத்துவின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது தெரியவந்தது.
கொள்ளிடம் போலீஸாா் மற்றும் சீா்காழி அரசு மருத்துவா் அருண், ஊராட்சித் தலைவா் காமராஜ் ஆகியோா் உடலை கைப்பற்றினா். பிரேத பரிசோதனைக்குப் பின்னா், ஆற்றிலேயே அவரது சடலம் புதைக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...