சாலை மறியல்: அரசு ஊழியா்கள் 51 போ் கைது
By DIN | Published On : 06th February 2021 08:16 AM | Last Updated : 06th February 2021 08:16 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற போலீஸாா்.
மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 51 பேரை போலீஸாா் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்தனா்.
மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினருடன் காவல் ஆய்வாளா் கே.சிங்காரவேலு பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆயினும் அவா்கள் உடன்படாததால், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்ளிட்ட 51 பேரை போலீஸாா் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...