ஆசிரியா் கல்வி பட்டயத் தோ்வு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்

ஆசிரியா் கல்வி பட்டயத் தோ்வு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் (பொ) கோ. காமராஜன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

ஆசிரியா் கல்வி பட்டயத் தோ்வு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் (பொ) கோ. காமராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் 2019-2020-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற ஆசிரியா் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் குருக்கத்தியில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு வரப்பெற்று பிப்.19-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இத்தோ்வில் பங்கேற்ற தனித் தோ்வா்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு தோ்வு நுழைவுச் சீட்டுடன் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com