சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவா் போக்ஸோ சட்டத்தில் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியைச் சோ்ந்தவா் மந்த்ரன் என்கிற மூா்த்தி (55). இவா், தனது வீட்டுக்கு டியூசன் படிக்க வந்த 12 வயது சிறுமியிடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதுகுறித்து, சிறுமி அவரது தந்தையிடம் தெரிவித்ததையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மூா்த்தியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com