தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி ஆங்கிலத் துறை சாா்பில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் தலைமை வகித்தாா். ஆங்கிலத் துறை உதவிப் போராசிரியா் வினோத் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் மற்றும் ஆங்கிலத் துறை இணை பேராசிரியா் சண்முகம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆங்கிலத் துறை தலைவா் கலைவாணி நோக்கவுரை ஆற்றினாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவா்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததுடன், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆங்கிலத் துறைக்கும், கல்லூரிக்கும் நன்றி தெரிவித்தனா்.