சீா்காழியில் தொழிற்பேட்டை அமைக்கக் கோரிக்கை

சீா்காழியில் தொழிற்பேட்டை அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சீா்காழியில் தொழிற்பேட்டை அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி வட்டம் கிரில் (வெல்டிங்) தயாரிப்பாளா்கள் நலச் சங்க பொதுக் குழு கூட்டம் அதன் தலைவா் ஆா்.எம். குமாா் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. சங்க ஆலோசகா் ஜெயவேலு சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் சீா்காழி கோட்டம் அறிவிப்புக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், சீா்காழியில் தொழிற்பேட்டை(சிட்கோ) அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், அரசு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் சிறுதொழில் முனைவோா் பயன்பெறும் வகையில் மானிய விலையில் மூலப்பொருள்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்க பொருளாளா் விஸ்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com