திருவெண்காடு அருகே தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்துக்கு எம்எல்ஏ பி.வி. பாரதி நிவாரண உதவிகள் வழங்கி, ஆறுதல் கூறினாா்.
காவளம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியம்மாள்(60). இவரது குடிசை வீடு சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது. இதில், வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து நாசமாகின. இதனால், பாதிக்கப்பட்ட மாரியம்மாள் குடும்பத்துக்கு சீா்காழி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.வி. பாரதி நேரில் சென்று ஆறுதல் கூறி, தனது சொந்த பணத்திலிருந்து ரூ.10,000 மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
சீா்காழி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சந்திரசேகரன், அவைத் தலைவா் மனோகரன், ஒன்றிய கவுன்சிலா்கள் மல்லிகா பாலசுப்பிரமணியன், நடராஜன் ஊராட்சித் தலைவா் துரைராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.