கீழையூா் ஒன்றியம் தலையாமழை ஊராட்சியில் ஆகாயத்தாமரை சூழ்ந்த குளத்தை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தலையாமழை ஊராட்சி நடுத்தெரு பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள பொதுக் குளத்தில் அதிக அளவில் ஆகாயத்தாமரை மண்டியிருப்பதால், அதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மேலும் இக்குளத்தில் ஒரே ஒரு படித்துறை மட்டுமே இருப்பதால், பெண்கள் இக்குளத்தை பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றனா்.
ஆகையால், இக்குளத்தில் கூடுதலாக படித்துறை அமைத்து, ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.