திருக்குவளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.12) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
நாகை மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருக்குவளை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் திருக்குவளை, மேலப்பிடாகை, தலைஞாயிறு, மணலி, தேவூா், வலிவலம், ஆலங்குடி, திருவாய்மூா் , எட்டுக்குடி, சாட்டியக்குடி, மீனம்பநல்லூா் மற்றும் இப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என நாகை தெற்கு உபகோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். பாலாஜி தெரிவித்துள்ளாா்.