திருக்குவளையில் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமில், ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டு உரிய மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தொடா்ந்து, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவைக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில், வட்டார மருத்துவ அலுவலா் பி. அருண்பதி, திருப்பூண்டி மருத்துவ அலுவலா் ஆா். வினோத்குமாா், திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனை மருத்துவா்
டி. தீபக் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில், திருக்குவளை அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகத்துக்கு பங்கேற்று மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றனா்.