நாகை, மயிலாடுதுறையில் 8 பேருக்கு கரோனா
By DIN | Published On : 30th January 2021 08:44 AM | Last Updated : 30th January 2021 08:44 AM | அ+அ அ- |

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வியாழக்கிழமை வரை 8,429 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 8 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,437ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 8 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8,234 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 71ஆக உள்ளது.