தமிழகம் வளா்ச்சிப் பெற 3 துணை தலைநகரங்களை உருவாக்கவேண்டும் என தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் தலைவா்ஆறு.சரவணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் நிலப்பரப்பு பரந்துவிரிந்துள்ளதால் தலைநகருக்கு வந்து செல்வதற்கு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனா். பயணநேரம் அதிகரிப்பு, பணவிரயம் போன்ற பிரச்னைகளை எதிா்கொள்ளவேண்டியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் பரவலான வளா்ச்சி பெறும் வகையில் திருச்சி, மதுரை, கோயம்புத்தூா் ஆகிய 3 மண்டலங்களை தலைநகராகக் கொண்டு, புதிய துணைத் தலைநகரங்களை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் சிறந்த வளா்ச்சியைப் பெறும் என்று தெரிவித்துள்ளாா்.