வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞா் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியது சனிக்கிழமை தெரியவந்தது.
வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் உள்ள மரத்தில் இளைஞா் இறந்த நிலையில் தூக்கில் தொங்குவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேளாங்கண்ணி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு 20 வயதிருக்கலாம். அவரது விவரம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.