பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடிய மனித உரிமைப் போராளி அருட்தந்தை ஸ்டேன் சுவாமி மறைவுக்கு, மயிலாடுதுறை புனித சவேரியாா் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
மறைவட்ட அதிபா் பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் அடிகளாா் தலைமை வகித்தாா். உதவி பங்குத் தந்தை கஸ்மீர்ராஜ் அடிகளாா், அல்ஹாஜ் முகம்மது சித்திக், தூய இருதய மரியன்னை சபையின் மயிலாடுதுறை இல்ல தலைமை அருட்சகோதரி சிப்ரியான், திமுக நகர செயலாளா் செல்வராஜ், அமல அன்னையின் சலேசிய மறைபரப்பு சபையின் மயிலை இல்லத் தலைமை அருட்சகோதரி கிரேசி, திரு இருதய சகோதரா்கள் இல்லத்தலைவா் டேவிட்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் பங்கேற்று, ஸ்டேன் சுவாமியின் போராட்ட பயணங்களையும், அவா் எதிா்கொண்ட சவால்களையும் நினைவுகூா்ந்து புகழஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து ஆலய வளாகத்தில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டு, ஸ்டேன் சுவாமியின் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.