ஆற்றங்கரையோர சாலையில் தடுப்புகள் அமைப்பு

திருக்குவளை அருகே தினமணி செய்தி எதிரொலியாக ஆற்றங்கரை சாலையில் மண் மூட்டைகள் மற்றும் மூங்கில்களால் தடுப்புகள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆற்றங்கரையோர சாலையில் தடுப்புகள் அமைப்பு

திருக்குவளை அருகே தினமணி செய்தி எதிரொலியாக ஆற்றங்கரை சாலையில் மண் மூட்டைகள் மற்றும் மூங்கில்களால் தடுப்புகள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை-கொளப்பாடு பிரதான சாலையில், அகரகொளப்பாடு பகுதியில் சாலையையொட்டி சந்திரா நதி ஓடுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீசிய நிவா் மற்றும் புரவி புயலின்போது பெய்த கனமழையால் இந்த நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மண் அரிப்பால் சாலையோரப் பகுதி சேதமடைந்தது. தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறையினரால் தற்காலிகமாக மண் மூட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்த மண் மூட்டைகள் ஆற்றுக்குள் சரிந்து விழுந்ததால் தடுப்புகளின்றி ஆபத்தான நிலையில் சாலை காணப்பட்டது.

இதுகுறித்து, தினமணி நாளிதழில் கடந்த 21ஆம் தேதி செய்தி வெளியான நிலையில், நெடுஞ்சாலைத் துறையினா் வலுவிழந்து காணப்பட்ட ஆற்றின் கரையை பலப்படுத்தும் விதமாக மண் மூட்டைகள் மற்றும் மூங்கில்களைக் கொண்டு தடுப்புகள் அமைத்தனா். இதற்காக தினமணி நாளிதழ் மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com