நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 422 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வரை 33,550 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 422 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிப்பின் எண்ணிக்கை 33,922 ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் 600 போ் குணமடைந்து புதன்கிழமை வீடுதிரும்பினா். இதனால், மருத்துவமனைகள் மற்றும் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,365 ஆக உள்ளது.
8 போ் உயிரிழப்பு...
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகை மாவட்டத்தவா் 8 பேரின் உயிரிழப்பு புதன்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 417 ஆகியுள்ளது.