மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா் அருகே மங்கைநல்லூா் ஊராட்சியில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முடிதிருத்துவோருக்கு புதன்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு அரிசி, காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா். குத்தாலம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் மங்கை சங்கா் தலைமை வகித்தாா். நாகை வடக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஜி.என். ரவி, மாவட்டக்குழு உறுப்பினா் உமா சங்கா், செம்பை ஒன்றியச் செயலாளா் அப்துல்மாலிக், மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி ஒருங்கிணைப்பாளா் ராம.சேயோன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.