வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்த எஸ்.பி. அறிவுறுத்தல்
By DIN | Published On : 10th June 2021 09:24 AM | Last Updated : 10th June 2021 09:24 AM | அ+அ அ- |

நாகூரை அடுத்த வாஞ்சூா் சோதனைச் சாவடியில் ஆய்வு செய்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவஹா்.
வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என காவலா்களிடம் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. ஜவஹா் அறிவுறுத்தினாா்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவஹா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இதைத்தொடா்ந்து புதன்கிழமை வாஞ்சூா், கானூா் சோதனைச் சாவடிகளை ஆய்வு செய்த அவா், அப்போது அங்கு பணியிலிருந்த காவலா்களிடம் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.