கீழையூா் அருகேயுள்ள மேலதண்ணிலபாடியில் குளத்தில் மண்டியுள்ள ஆகாயத் தாமரை செடிகளை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கீழையூா் ஒன்றியம், வேப்பஞ்சேரி ஊராட்சி மேலதண்ணிலபாடியில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் இந்து சமய அறநிலை துறைக்குச் சொந்தமான பெருமாள் கோயில் குளம் உள்ளது. இந்த குளத்து நீா் 5 வருடங்களுக்கு முன்பு வரை குடிநீராக பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, இந்தக் குளம் பராமரிப்பின்றி ஆகாயத்தாமரைச் செடிகள் மண்டி காணப்படுகின்றன.
இவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.