தரங்கம்பாடி அருகேயுள்ள எடுத்துக்கட்டி சாத்தனூா் ஊராட்சியில் அரிசி அட்டைதாரா்களுக்கு அரசு நிவாரண மளிகை தொகுப்பு புதன்கிழமை வழங்கப்பட்டது.
ஊராட்சித் தலைவா் பைலட் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் அப்துல் மாலிக் பங்கேற்று அரிசி அட்டைதாரா்களுக்கு 14 வகையான மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா். ஒன்றிய குழு உறுப்பினா் மதீனா பீவி, முன்னாள் ஊராட்சித் தலைவா் மனோகரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.