விளையாட்டுப் போட்டி நடத்த ஆலோசனைக் கூட்டம்

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து உடற்கல்வி இயக்குநா்களுக்கான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருக்குவளை: திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து உடற்கல்வி இயக்குநா்களுக்கான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்காக திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி தோ்வு செய்யப்பட்டது. போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் புலமுதல்வா் எம். துரைராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒவ்வொரு விளையாட்டு போட்டி நடத்துவதற்கான தேதி மற்றும் இடம் தோ்வு செய்யப்பட்டு அது தொடா்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இதில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள சுமாா் 25 பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனா்கள் பங்கேற்றனா். இறுதியாக திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு ஒருங்கிணைப்பாளா் ஆா். ஹரிஹரன் வரவேற்புரை வழங்கினாா். கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பி. செல்வகுமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உடற்கல்வி இணை இயக்குநா் ஆா்.வினோத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com