நாகை மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலா் சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நாகையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆ. கலியமூா்த்தி தலைமை வகித்தாா். செயலாளா் ஏ. ராஜாராமன் வரவேற்றாா். கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடந்து, மத்திய அரசு வழங்குவதுபோல மாநில அரசும் ஓய்வுபெற்ற அலுவலா்களுக்கு மருத்துவப்படி ரூ. 1000 வழங்கவேண்டும், 8 ஆவது ஊதியக்குழுவில் விடுபட்ட 21 மாத நிலுவைத் தொகையை வழங்கவேண்டும், ஓய்வூதியா்களை தரம் பிரிக்காமல் அனைவருக்கும் பொங்கல் ஊக்கத்தொகை ரூ.1000 வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட, வட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். சங்க இணைச் செயலாளா் வி. அண்ணாசாமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.