பங்குனி மாதப் பிறப்பு: சீா்காழி கோயிலில் கோ பூஜை
By DIN | Published On : 15th March 2021 08:52 AM | Last Updated : 15th March 2021 08:52 AM | அ+அ அ- |

சீா்காழி சட்டநாதா் கோயிலில் நடைபெற்ற கோபூஜை.
சீா்காழி சட்டநாதா் கோயிலில் பங்குனி மாதப் பிறப்பையொட்டி கோபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி சட்டநாதா் கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் பங்குனி மாதப் பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை நடைபெற்றது.
முன்னதாக, கொடிமரத்து விநாயகா், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, பசு, கன்றுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
மேலும், பங்குனி மாதப் பிறப்பையொட்டி, பிரம்ம தீா்த்தக் குளத்தில் அஸ்திர தேவருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...