மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி. காசிராமன் வரதம்பட்டு ஊராட்சியில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.
இவா், நாம் தமிழா் கட்சி சாா்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் பல்வேறு ஊராட்சிகளில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்து வருகிறாா். திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த காசிராமன், செவ்வாய்க்கிழமை காலை முதல் வரதம்பட்டு ஊராட்சியில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா். கட்சியின் மாவட்டச் செயலாளா் தமிழன் காளிதாசன், தொகுதி செயலாளா் கவியரசன் உள்ளிட்டோா் வேட்பாளருடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனா்.