தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதிக்காவிட்டால், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தும் மீனவா்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட தீா்மானித்துள்ளனா்.
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவா்களின் ஆலோசனைக் கூட்டம், நாகை நம்பியாா் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்காவிட்டால், சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.