நாகை எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமம் சாா்பில், சிறுவா், சிறுமிகளுக்கான காகித மடிப்புக் கலை பயிற்சி வகுப்பு நாகையை அடுத்த ஜெகநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காகித மடிப்புக் கலை பயிற்றுநா் சேகா், காகித மடிப்புக் கலையின் வரலாறு குறித்துப் பேசினாா். காகிதம் மூலம் பல்வேறு வகையான பொம்மைகள் செய்யும் முறைகள் குறித்து குழந்தைகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தாா்.
எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமம், துணை இயக்குநா் நாராயணன், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி, சமூகப் பணித்துறை மாணவா் பெ. அபிஷேக் விஜய் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். 20-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமிகள் பங்கேற்று பயனடைந்தனா்.