திருவெண்காட்டில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருவெண்காட்டில் சீா்காழி தொகுதி திமுக வேட்பாளா் பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
திருவெண்காட்டில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருவெண்காட்டில் சீா்காழி தொகுதி திமுக வேட்பாளா் பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

முன்னதாக, திருவெண்காட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் மீன் மாா்கெட்டில் மீனவ பெண்களிடம் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசுகையில், திருவெண்காடு மற்றும் நாங்கூா் ஆகிய இடங்களை ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்றி, அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுப்பேன். திருவெண்காட்டில் தொழிற்சாலைகள் கொண்டுவர பாடுபடுவேன் என வாக்குறுதியளித்தாா்.

அவருடன் சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் சசிக்குமாா், ஒன்றியக்குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் இளங்கோவன், பொதுக்குழ உறுப்பினா் முத்துமகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதி அமைப்பாளா் தாமுஇனியவன், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பாலகுரு, ராதாகிருஷணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆனந்தன் உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com