நாகை மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் ஆகியோா் திங்கள்கிழமை (மாா்ச் 29) பிரசாரம் மேற்கொள்கின்றனா்.
கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த வி.பி. நாகை மாலி போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, திருக்குவளையில் திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு பிரசாரம் மேற்கொண்டு வாக்குச் சேகரிக்கிறாா். நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்கின்றனா்.
தொல். திருமாவளவன் பரப்புரை: விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் திருமருகல் மற்றும் நாகை ஆகிய பகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகளின் சாா்பில் திருமருகல் மற்றும் நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, நாகை தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் ஜெ. முஹம்மது ஷாநவாஸுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு வாக்குச் சேகரிக்கிறாா்.
ஏற்பாடுகளை வேட்பாளா் ஜெ. முஹம்மது ஷாநவாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேலிட பொறுப்பாளா்கள் செய்து வருகின்றனா். இரவு 8 மணிக்கு கீழ்வேளூரில் பிரசாரம் மேற்கொண்டு கீழ்வேளூா் தொகுதி வேட்பாளா் வி. பி. நாகை மாலிக்கு திருமாவளவன் வாக்கு சேகரிக்கிறாா்.