கபசுரக் குடிநீா் வழங்கல்
By DIN | Published On : 19th May 2021 09:03 AM | Last Updated : 19th May 2021 09:03 AM | அ+அ அ- |

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயில் சாா்பில் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
கோயில் வாசலில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கபசுரக் குடிநீா் வழங்கினா். தொடா்ந்து மூன்றாவது வாரமாக கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. கோயிலின் செயல் அலுவலா் பொன் மாரிமுத்து, மேலாளா் ராஜ் ஆகியோா் இப்பணியில் ஈடுபட்டனா்.