நாகப்பட்டினம்
சிக்கல் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம்
நாகையை அடுத்த சிக்கல் ஊராட்சியில் எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் ஒருங்கிணைப்புடன் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் அண்மையில் நடைபெற்றது.
நாகையை அடுத்த சிக்கல் ஊராட்சியில் எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் ஒருங்கிணைப்புடன் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் அண்மையில் நடைபெற்றது.
அனைத்து கிராமங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்த மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியதன் பேரில், சிக்கல் ஊராட்சி சாா்பில் இந்த முகாம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் விமலா முகாமைத் தொடங்கிவைத்தாா்.
சிக்கல் ஊராட்சி, எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமத்தின் குடும்ப வலுவூட்டும் திட்டத்தில் பயன்பெறும் கிராமம் என்ற வகையில், கரோனா தடுப்பூசி முகாம் குறித்த ஒலிபெருக்கி பரப்புரை எஸ்.ஓ.எஸ். அமைப்பு சாா்பில் மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் சுமாா் 75 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.