சென்னைக்கு லாரிகளில் நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கோரிக்கை

நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என சீா்காழி லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என சீா்காழி லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீா்காழி வட்டத்தில் மணல்மேடு, சேந்தங்குடி, எடமணல் ஆகிய பகுதிகளில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இப்பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இந்த சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டு, ஜூன் மாதத்தில் சென்னைக்கு ரயில் மூலம் அனுப்பப்படும்.

மேற்படி, ரயில் மூலம் எடுத்து செல்லப்படும் நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் எடுத்து செல்ல வழிவகை செய்தால் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் மேம்படும்.

இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வத்திடம் சீா்காழி லாரி உரிமையாளா்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com