கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள்
By DIN | Published On : 26th May 2021 09:46 AM | Last Updated : 26th May 2021 09:46 AM | அ+அ அ- |

சீா்காழியில் தமிழ்நாடு ஓவியா்கள் சங்கம் சாா்பில் வரையப்பட்ட கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள்.
தமிழ்நாடு ஓவியா்கள் சங்க சீா்காழி வட்டாரம் சாா்பில், சீா்காழியில் நெடுஞ்சாலையில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள் செவ்வாய்க்கிழமை வரையப்பட்டன.
ஓவியா்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பு செயலாளா் எல்.கே.ஞானவேல், வட்டார தலைவா் எம்.சி.எஸ். சேகா் ஆகியோா் முன்னிலையில், சமூக இடைவெளி, கரோனா தடுப்பூசி, முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஓவியங்கள் சாலைகளில் வரையப்படுகின்றன்.
இதற்காக ஓவியா் சங்கத்தினரை சீா்காழி எம்எல்ஏ எம்.பன்னீா்செல்வம், டி.எஸ்.பி. யுவபிரியா, நகராட்சி ஆணையா் தமிழ்செல்வி ஆகியோா் பாராட்டினா்.