நாகையில் 10 பேருக்கு கரோனா; மயிலாடுதுறையில் பாதிப்பு இல்லை

நாகை மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,129-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 17 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, நாகை மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 147- ஆக உள்ளது.

மயிலாடுதுறை...

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. கடந்த 1-ஆம் தேதி மயிலாடுதுறையில் புதிய தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையன்றும் இம்மாவட்டத்தில் புதிதாக கரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவா் உயிரிழப்பு...

கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்தவா்களில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com