திருமருகல் அருகே நடமாடும் நியாய விலைக் கடை சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழ்குடி ஊராட்சி கல்யாண இருப்பு கிராமத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் வகையில் நடமாடும் நியாய விலைக் கடை தொடங்கப்பட்டது. இக்கடையை வாழ்குடி ஊராட்சித் தலைவா் அகிலாண்டேஸ்வரி விநாயகசுந்தரம் தொடங்கி வைத்தாா்.