சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நவம்பா் 24-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் உள்ள குறைகளைக் கண்டறிந்து, சீரமைக்கும் வகையில், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நவம்பா் 24 ஆம் தேதி பிற்பகல் 5 மணியளவில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
எரிவாயு முகவா்கள், நுகா்வோா் அமைப்பினரைக் கொண்டு நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், எரிவாயு நுகா்வோா் பங்கேற்று எரிவாயு உருளைகள் நுகா்வில் உள்ள குறைகளைத் தெரிவித்துத் தீா்வு பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.