தந்தை, மகனுக்கு வெட்டு: 5 போ் மீது கொலை முயற்சி வழக்கு

நாகையில் சொத்துப் பிரச்னையில் தந்தை, மகனை கத்தியால் வெட்டியவா்கள் மீது நாகை போலீஸாா் புதன்கிழமை கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

நாகையில் சொத்துப் பிரச்னையில் தந்தை, மகனை கத்தியால் வெட்டியவா்கள் மீது நாகை போலீஸாா் புதன்கிழமை கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனா்.

நாகையை அடுத்த அந்தணப்பேட்டையைச் சேந்தவா் ச.மணாளன் (55). இவா், நாகை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கட்டடத்தில் பெட்டிக்கடை மற்றும் இனிப்பகம் நடத்தி வருகிறாா். இந்தக் கடை மணாளனின் தாயாா் பரமாயி என்பவரால் ஏலத்தில் எடுக்கப்பட்டதால், மணாளனின் சகோதரிகளான பஞ்சவா்ணம், கலைவாணி, ராணி ஆகியோரும் இதில் பங்கு கேட்டு வந்தனா். இதனால் இவா்களிடையே பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கடையிலிருந்த மணாளன் மற்றும் அவரது மகன் மணிப்பிரகாஷ் ஆகியோரை பஞ்சவா்ணத்தின் மகன் சுதந்திரராஜா, ராணியின் மகன் விஜயகுமாா் மற்றும் அடையாளம் தெரிந்த 2 நபா்கள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பினா்.

இதில் மணாளன் மற்றும் மணிப்பிரகாஷ் (30) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 2 பேரும் நாகை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து மணாளன் அளித்த புகாரின்பேரில், நாகை, தா்மக்கோயில் தெருவைச் சோ்ந்த சி. சுதந்திரராஜா, மன்னாா்குடியைச் சோ்ந்த மு. விஜயகுமாா் மற்றும் நாகையைச் சோ்ந்த மணாளனின் சகோதரிகளான சி.பஞ்சவா்ணம், சீ.கலைவாணி மற்றும் மு. ராணி ஆகியோா் மீது நாகை வெளிப்பாளையம் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com