கீழையூா் ஒன்றியத்தில் தடுப்பூசி இயக்கம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின்பேரில், மகா தடுப்பூசி இயக்கம் வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்குவளை ஊராட்சித் தலைவா் இல.பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதேபோல கீழையூரில் ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதிபால்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு, வருவாய் ஆய்வாளா் கீதாராணி முன்னிலை வகித்தாா்.