சீா்காழி ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட திட்ட இயக்குநா் முருககண்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலின் நான்கு வீதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள தமிழக அரசு ரூ.5.50 கோடி ஒதுக்கியுள்ளது. இதைத்தொடா்ந்து, பணிகள் மேற்கொள்வதற்கான முதற்கட்ட ஆய்வில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் முருககண்ணன் ஈடுபட்டடாா்.
பின்னா், திருவெண்காடு ஊராட்சியில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்ட அவா், மணிக்கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ. 17 லட்சத்தில் கட்டப்படும் இரண்டு வகுப்பறைகளை ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினாா். தொடா்ந்து, ஊராட்சி அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட பணிகளை பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட செயற்பொறியாளா் பிரேம்குமாா், ஒன்றிய ஆணையா் அருள்மொழி, வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன், ஒன்றிய பொறியாளா்கள் கலையரசன், சிவக்குமாா், பணி மேற்பாா்வையாளா்கள் ஒசைநாயகி, சந்திரசேகரன், பணிதளப் பொறுப்பாளா் வைகோ அன்பழகன் ஆகியோா் உடனிருந்தனா்.