தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரக நினைவு யாத்திரைக் குழுவினர் மௌனம் அனுசரிப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தின் நினைவு யாத்திரையில் பங்கேற்ற குழுவினருடன் காங்கிரஸார் இன்று (ஏப்.29)  அடையாள மெளனம் மேற்கொண்டனர்.

News image

வேதாரண்யத்தில் அடையாள மெனனம் மேற்கொண்ட யாத்திரைக் குழுவினருடன், முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.பி.,பி.வி.ராசேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸார்.

Updated On :29 ஏப்ரல் 2022, 6:29 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தின் நினைவு யாத்திரையில் பங்கேற்ற குழுவினருடன் காங்கிரஸார் இன்று (ஏப்.29)  அடையாள மெளனம் மேற்கொண்டனர்.

நாட்டின் 75-வது சுதந்திர தின பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ல் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் நினைவு நிகழாண்டு சிறப்பான வகையில் கொண்டாடப்படுகிறது.

Story image

உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் நினைவு யாத்திரை முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு தலைமையில் ஏப்.13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கியது.

இந்த குழுவினர் 232 கிலோ மீட்டர் தொலைவை நடைபயணமாக மேற்கொண்டு வியாழக்கிழமை இரவு வேதாரண்யம் வந்தடைந்தனர்.

இந்த குழுவினர் இன்று காலையில் வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டடத்தில் அடையாள மெளனம் மேற்கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மெளனத்தில், முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு, முன்னால் எம்.பி., பி.வி. ராசேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸார் பங்கேற்றனர்.

Story image


மாலையில் உப்புத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர்.

Story image

சனிக்கிழமை காலை 6 மணிக்கு யாத்திரை குழுவினருடன் வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் இருந்து பேரணி நடைபெறுகிறது. இந்த குழுவினர் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காலை 7 மணிக்கு அகஸ்தியம் பள்ளி நினைவு தூண் வளாகத்தில் உப்பு அள்ளும் நிகழ்சியில் ஈடுபடுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.