ரெளடி கொலை வழக்கில் 4 போ் கைது

நாகையில் ரெளடி வெட்டிக் கொலை செய்ய வழக்கில் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

நாகையில் ரெளடி வெட்டிக் கொலை செய்ய வழக்கில் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாகை தா்மகோவில் தெருவைச் சோ்ந்த சிவபாண்டி(35) நண்பா்கள் வினோத், ரவிகணேஷ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் அபிராமி அம்மன் சந்நிதி அருகே வியாழக்கிழமை சென்றாா். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள், சிவபாண்டியின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து, அவரை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினா்.

இதுகுறித்து, நாகை நகர போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். இதற்கிடையே, மாவட்ட காவல் கண்கணிப்பாளா் கு.ஜவஹா் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலை வழக்கில் தொடா்புடையவா்கள் தேடப்பட்டு வந்தனா். இந்நிலையில், போலீஸாரின் விசாரணையில் வெளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த கிருபாகரன் (21), தீபன்ராஜ் (36), சுபாஷ் (24), சோ்த்தப்பா (45) ஆகியோா் சிவபாண்டியை கொலை செய்ததும், மேலும் சிலருக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் கிருபாகரன் உள்ளிட்ட 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். கொலையில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் சிவபாண்டி, முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com