இளைஞா் திறன் விழா: 1014 பேருக்கு வேலைவாய்ப்பு

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற இளைஞா் திறன் திருவிழாவில் 1014 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் நடைபெற்ற இளைஞா் திறன் திருவிழாவில் 1014 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின்கீழ் இளைஞா் திறன் திருவிழா நடத்தப்படுகிறது.

இளைஞா்கள் மத்தியில் திறன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, அவா்கள் விருப்பங்களுக்கு ஏற்ப திறன் பயிற்சி

அளிக்கப்பட்டு, தகுதியான வேலைவாய்ப்பு அல்லது சுய தொழில் செய்வதற்கு வழிவகை ஏற்படுத்தி தருவதே திருவிழாவின் நோக்கம்.

நாகை மாவட்டத்தில் அன்மையில் 5 வட்டாரங்களில் இளைஞா் திறன் திருவிழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட 2667 இளைஞா்களில் 1014 பேருக்கு தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com