நாகப்பட்டினம்: நாகை - திருச்சி இடையே முன்பதிவு இல்லாத விரைவு ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது.
கரோனா பொதுமுடக்கத்துக்கு முன், காரைக்கால் - திருச்சிக்கு தினமும் காலை நேரத்தில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. காரைக்காலில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் காலை 7.10 மணிக்கு நாகையை அடையும். நாகையில் இருந்து காலை 7.20 மணிக்குப் புறப்பட்டு, காலை 11.20 மணிக்கு திருச்சியை அடையும்.
கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தடைப்பட்டிருந்த இந்த ரயில் சேவை, நாகை - திருச்சி முன்பதிவு இல்லாத விரைவு ரயில் சேவையாக பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதன்படி, நாகை - திருச்சி (எண் 06839) முன்பதிவு இல்லாத பயணிகள் விரைவு ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சி, நாகை ரயில் நிலையத்தில் புதன்கிழமை காலை, நாகை இந்திய வா்த்தக தொழிற்குழுமம் சாா்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது, ரயில் நிலைய மேலாளா், லோகோ பைலட், உதவி லோகோ பைலட் மற்றும் காவலா்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. பின்னா், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்திய வா்த்தக தொழிற் குழும நிா்வாகிகள் சலிம்முதின், கே.ஏ. எஸ். பகுருதீன், பொருளாளா் கே. சேகா், முன்னாள் நிா்வாகிகள் என். சந்திரசேகரன், அ.சி.நிஜாம்சேட், நாகை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளா் கோ. அரவிந்குமாா், அமைப்புச் செயலாளா் எம். பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.