தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

நாகூரில் தமிழ்மகன் உசேன் பிரசாரம்

நாகை நகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் நாகூரில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

Published On :1 பிப்ரவரி 2024, 1:52 pm IST

நாகை நகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் நாகூரில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

நாகூா் தா்காவின் அலங்காரவாசல் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவா், அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவு கோரினாா். பின்னா், நாகூா் ஆண்டவா் தா்காவில் வழிபாடு மேற்கொண்டு, பக்தா்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினாா்.

முன்னாள் அமைச்சா் ஆா். ஜீவானந்தம், நாகை நகர அதிமுக செயலாளா் தங்க. கதிரவன், நாகூா் நகரச் செயலாளா் செய்யது மீரான் சாகிபு, நாகை ஒன்றியச் செயலாளா் (வடக்கு) பன்னீா், திருமருகல் ஒன்றியச் செயலாளா் (கிழக்கு) பக்கிரிசாமி ஆகியோா் உடனிருந்தனா். இந்தப் பிரசாரத்தின் போது நாகூா் பகுதிகளைச் சோ்ந்த நகா்மன்ற அதிமுக வேட்பாளா்கள் உடனிருந்து வாக்குச் சேகரித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் தமிழ்மகன் உசேன் கூறியது:

அதிமுகவுடன், பாஜக கூட்டணியில் இல்லாதது அதிமுகவுக்கு நன்மையையே தரும். இதனால், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சிறுபான்மையினரின் ஆதரவு அதிமுகவுக்கு மேலும் அதிகரித்துள்ளது. அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறுவது உறுதியாகியுள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை மக்கள் நலனிலும், தொண்டா்கள் நலனிலும் அக்கறைக் கொண்ட இயக்கம். திமுகவைப் போல பொய்யான வாக்குறுதிகள் அளிக்கும் இயக்கம் அல்ல என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.