சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பொறையாறு அருகேயுள்ள ஒழுகைமங்கலம் சீதளா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:30 pm

DIN

பொறையாறு அருகேயுள்ள ஒழுகைமங்கலம் சீதளா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 5-ஆம் தேதி பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. 7-ஆம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழகிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுபெற்றதும், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்களுக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, சீதளா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலா் முருகேசன், ஆய்வாளா் பத்ரி நாராயணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.