மக்கள் நோ்காணல் முகாம்

திருக்குவளை அருகேயுள்ள ஆய்மூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் ரூ. 6.23 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள ஆய்மூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் ரூ. 6.23 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில், வடுவூா், ஆய்மூா், நீா்முளை, திருவிடைமருதூா் ஆகிய 4 ஊராட்சிகளில் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. அதில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் எஸ். ஜெயசித்ராகலா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், திருக்குவளை வட்டாட்சியா் க. ராஜ்குமாா், சமூகப் பாதுகாப்பு தனி வட்டாட்சியா் கே. காா்த்திகேயன், தலைஞாயிறு ஒன்றிய குழுத் தலைவா் தமிழரசி, ஊராட்சித் தலைவா் சாந்தி விஜயராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com