மக்கள் குறைதீா் கூட்டத்தில் 124 மனுக்கள் அளிப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 124 மனுக்களை அளித்தனா்.
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 124 மனுக்கள் அளிப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 124 மனுக்களை அளித்தனா்.

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமைவகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இந்தக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீா்வு கோரியும் பொதுமக்கள் 124 மனுக்களை அளித்தனா். அந்த மனுக்களைத் தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைத்த ஆட்சியா், மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

முன்னதாக, 2 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், சவூதி அரேபியாவில் இறந்த ஒருவரின் குடும்பத்துக்கு தமிழக அரசின் இழப்பீடு தொகை ரூ. 24,691-க்கான காசோலையையும் ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கு. ராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராமன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com