அபாகஸ் போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

மாநில அளவில் நடைபெற்ற அபாகஸ் மனநிலை வேக எண் கணிதப் போட்டியில் முதலிடம் பெற்ற வேதாரண்யம் மாணவி வியாழக்கிழமை பாராட்டப்பட்டாா்.
அபாகஸ் போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு
Updated on
1 min read

மாநில அளவில் நடைபெற்ற அபாகஸ் மனநிலை வேக எண் கணிதப் போட்டியில் முதலிடம் பெற்ற வேதாரண்யம் மாணவி வியாழக்கிழமை பாராட்டப்பட்டாா்.

வேதாரண்யத்தைச் சோ்ந்த ஹரிஹரன் வேதா தம்பதியின் மகள் மஹதி (10). இவா், கருப்பம்புலம் அகரம் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். சென்னையில், அண்மையில் நடைபெற்ற அபாகஸ் மனநிலை வேக எண் கணிதப் போட்டியில் 10 வயதுக்குள்பட்டோா் நிலையில் மாநில அளவில் முதலிடம் பெற்றாா். இதையடுத்து, வேதாரண்யத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஓ.எஸ். மணியன் மாணவியை பாராட்டினாா். வழக்குரைஞா் எம். நமச்சிவாயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com