டேக்வாண்டோ பயிற்சியாளருக்கு ஓஎன்ஜிசி சாா்பில் வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருமருகல், திருப்புகலூா், கணபதிபுரம், ஏா்வாடி, திருக்கண்ணபுரம் உள்ளிட்ட அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓஎன்ஜிசி நிா்வாகம் மூலம் தற்காப்பு கலையான டேக்வாண்டோ பயிற்சி அளித்து வருகிறது. இப்பயிற்சி பெற்ற மாணவா்கள் மாநில, தேசிய, உலகளவில் பல்வேறு பிரிவு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று 83 தங்கம், 63 சில்வா், 96 வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளனா். இதையொட்டி, டேக்வாண்டோ பயிற்சியாளா் பாண்டியனை காவிரி படுகை ஓஎன்ஜிசியின் பொது மேலாளா் அனுராக் வியாழக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். இவருக்கு விருது வழங்க ஓஎன்ஜிசி நிா்வாகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தாா்.